பள்ளிகளுக்கு வெளியே குழந்தைகளை அழைத்துச் செல்லும் ஆசிரியர்களுக்குப் பெரும் பிரச்சனை அவர்களை எவ்வித சேதாரமும் இல்லாமல் சேட்டைகள் செய்யவிடாமல் கூட்டத்தில் தொலைந்து போய்விடாமல் பத்திரமாகப் பாதுகாத்துத் திரும்பக் கொண்டுவந்து விடுவதுதான். நாம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களிலானாலும் சரி, புகழ்பெற்ற அருங்காட்சியகங்களினாலும் சரி கூட்டமாக கல்விச் சுற்றுலா வரும் குழந்தைகளை (சீருடையுடனே அவர்கள் அழைத்து வரப்படுவார்கள். அப்போதானே தொலைந்து போனாலும் எளிதாகக் கண்டுபிடிக்க முடியும்) அவர்களுடைய மேய்ப்பர்களான ரெண்டு அல்லது மூணு ஆசிரியர்களுடன் பார்க்கலாம். மிருகக் காட்சி சாலைகளில் மிருகங்களின் மீது கற்களைக் குழந்தைகள் எறிவதை ஆசிரியர் பெரும்பாலும் கண்டிப்பதில்லை.
You are currently browsing articles tagged புத்தகங்கள்.
Tags: கல்வி, ச.தமிழ்ச்செல்வன், புத்தகங்கள், புத்தகம் பேசுது
