கட்டுரை

You are currently browsing the archive for the கட்டுரை category.

ஆதியிலே பாடப்புத்தகங்களே இல்லாத காலம் ஒன்று இருந்தது. வரலாற்றின் ஒரு புள்ளியில்தான் பாடப்புத்தகம் வந்தது. சிலபஸ் எனப்படும் பாடத்திட்டமும் கூட வரலாற்றின் துவக்கத்தில் இருந்ததில்லை. மனிதகுலம் வர்க்க சமூகமாகப் பிளவுண்ட பிறகே ஆளும் வர்க்கம் உழைக்கும் வர்க்கத்தின் உழைப்பைச் சுரண்டுவதற்கு ஒப்புதல் தரும் வண்ணம் உழைக்கும் வர்க்கத்தின் மனங்களைத் தகவமைக்க வேண்டிய அவசியம் ஆள்பவர்களுக்கு ஏற்பட்டது. மனிதகுலத்தின் பொதுவான சேகரமான அறிவைத் தனியுடைமை ஆக்கிப் பெருவாரியான மக்களைக் கல்விச்சாலைகளுக்கு வெளியில் வைத்துப் பலகாலம் அறிவையும் அதிகாரத்துக்கான ஒரு சாதனமாக்கிக் கொண்டிருந்து ஆளும் வர்க்கம்.  அதன்மூலம் தான் அறிவில் தாழ்ந்த வர்க்கம் என உழைக்கும் வர்க்கம் ஒப்புக்கொடுக்க நேரிட்டது. இந்தியாவின் ‘சிறப்பான’ சாதியக்கட்டுமானம் கல்வியை காட்டுக்குள்ளே பர்ணசாலை அமைத்துப் பார்ப்பனருக்கும் ஆளும் வர்க்கத்துக்கும் மட்டுமெனக் கொடுத்து வந்தது. அதை மீறிய ஏகலைவனின் கட்டைவிரல் துண்டிக்கப்பட்டது.

இங்கிலாந்தில் வெகுண்டெழுந்த தொழிலாளி வர்க்கத்தின் ‘சாசன இயக்கம்’ தான் முதன் முதலாக அனைவருக்கும் கல்வி வேண்டும் என்கிற முழக்கத்தை முன்வைத்தது. அது உலகெங்கும் பரவியது. தொழிற்புரட்சி ஏற்பட்ட பின்னான காலத்தில் எழுந்த முதலாளி வர்க்கத்துக்கு எந்திரங்களைக் கையாளவும் கணக்குப் பார்க்கவும் தேவையான அடிப்படைக்கல்வி பெற்ற ஒரு உழைக்கும் கூட்டம் தேவைப்பட்டது. ஆளும் வர்க்கத்தின் இத்தேவையைக் காலந்தோறும் பூர்த்தி செய்ய ஆளும் வர்க்கத்தின் அரசுகள் பாடத்திட்டகளையும் கற்பிக்கும் முறைமைகளையும் மாற்றிக் கொண்டே வந்ததுதான் கல்வியின் வரலாறும் கல்வியின் அரசியலும் ஆகும்.

Read the rest of this entry »

Tags: , ,

எளிய தமிழ் அலங்காரமற்ற இயற்கையான தமிழ் – சகமனிதனோடு நாம் தினசரி பேசிப் பழகும் தமிழ் மதிப்பிழந்து நிற்பது நமது பண்பாட்டின் நேர்மை குறித்த பிரச்சினைகளில் ஒன்று.

பாராட்டு மேடைப் பக்கம் திரும்பினால், கொண்டாட்டத் தமிழ்..! கூஜாத் தமிழ்.
தொலைக்காட்சியில், சிதைவுண்ட தமிழ்..!

தீவிர இலக்கிய உலகில், முடிச்சு விழுந்து சிக்குண்ட தமிழ்..!

பிள்ளைகளின் பாடப்புத்த உலகில் – ஓர் அகங்காரத் தமிழ்..!

தமிழின் மீது உண்மையாகப் பற்று கொண்டவரிடம் இருந்து பல கேள்விகள் பிறக்கின்றன.  கோடிக்கணக்கான சாதாரண மனிதனின் தமிழ் எது? அவனைத் தூக்கி நிறுத்தும் தமிழ் எது? விரிவான உலகை அவனுக்குப் பிரியமாய் அறிமுகம் செய்யும் தமிழ் எது?

உலகின் கவனத்தை நம் பக்கம் திரும்ப வைக்கும் ஆய்வுத் தமிழ் ஏன் வளரவில்லை..? ஆய்வுத் தமிழைப் பின்னுக்குத் தள்ளி ஆர்ப்பாட்டத் தமிழ் ஏனிப்படி வெளிச்சமும் சத்தமுமாய்த் திரிகிறது..? ஓர் அரசாங்கத்துக்கு இதிலென்ன இவ்வளவு ருசி..?

Read the rest of this entry »

Tags: ,

பகிர்தல் – ஜனநாயக வகுப்பறையின் அடிப்படை.

பகிர்தல் – இங்கு கருத்துப் பகிர்வு; பகிர்தல் என்பது பங்கேற்பு.

இன்னும் சற்று விளக்குவதானால், ஒவ்வொரு குரலுக்கும் வாய்ப்பு; மிக முக்கியமாக – ஆசிரியர் குரலை எதிர்க்கும் குரல்களுக்கும் வாய்ப்பு.

எந்தத் தலைப்பில் ஆசிரியர்களிடம் உரையாடினாலும், “பேசவிடுங்கள்” என்றொரு உபதலைப்பு எடுத்து என் எண்ணங்களைக் கொட்டுவதுண்டு, எதிர்வினைகள் பல மாதிரி இருந்திருக்கின்றன. உடன்படுபவர்கள்தான் அதிகம். ஆனால் நிச்சயம் ஒரு ‘க்’கன்னா இருக்கும்.

“பேச விடலாம். ஆனா… என்னத்தப் பேசுவான்? உளறிக் கொட்டுவான்?”

“பேச விடலாம் சார்! நல்லது தான். ஆனா சிலபஸ் யார் முடிக்கிறது?…”

“நான் பேச விட்டுருக்கேன்! ஆனா புண்ணியம் இல்ல. ஆளுக்கொண்ணு பேசுவான்!…”

“பேசச் சொல்லலாம். தமிழ்’ல முடியும்; ஹிஸ்டரி’ல முடியும். மேத்ஸ் கிளாஸ்ல என்ன சார் பேசுவான்?…”

“நல்ல யோசனை! பேச வைச்சா அவனுக்கும் பாடத்தில ஈடுபாடு வரும். நான் முயற்சி செஞ்சிருக்கேன். ஆனா அவனுடைய ஒத்துழைப்பு போதுமானதா இல்ல!”

Read the rest of this entry »

Tags: , ,

பள்ளிகளுக்கு வெளியே குழந்தைகளை அழைத்துச் செல்லும் ஆசிரியர்களுக்குப் பெரும் பிரச்சனை அவர்களை எவ்வித சேதாரமும் இல்லாமல் சேட்டைகள்  செய்யவிடாமல் கூட்டத்தில் தொலைந்து போய்விடாமல் பத்திரமாகப் பாதுகாத்துத் திரும்பக் கொண்டுவந்து விடுவதுதான். நாம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களிலானாலும் சரி, புகழ்பெற்ற அருங்காட்சியகங்களினாலும் சரி கூட்டமாக கல்விச் சுற்றுலா வரும் குழந்தைகளை (சீருடையுடனே அவர்கள் அழைத்து வரப்படுவார்கள். அப்போதானே தொலைந்து போனாலும் எளிதாகக் கண்டுபிடிக்க முடியும்) அவர்களுடைய மேய்ப்பர்களான ரெண்டு அல்லது மூணு ஆசிரியர்களுடன் பார்க்கலாம். மிருகக் காட்சி சாலைகளில் மிருகங்களின் மீது கற்களைக் குழந்தைகள் எறிவதை ஆசிரியர் பெரும்பாலும் கண்டிப்பதில்லை.

Read the rest of this entry »

Tags: , , ,

கலை உலகம் பற்றியும் ஊடகம் பற்றியும் புதிய ஆசிரியனில் வரும் விமர்சனங்களைக் கவனிக்கிறேன். விமர்சனங்களில் நிதானம் இருக்கிறது. உணர்ச்சிவசப்பட்டு நிலைகுலையாத – உற்சாகம் கொண்டு சரிந்து விழாத நிதானம்! நவம்பர் இதழில் மதுக்கூர் இராமலிங்கமும் சோழ.நாகராஜனும் ஊடகங்கள் பற்றி எழுதியிருந்தார்கள். வாசகன் உணர்வுப் பூர்வமாய் புரிந்து அங்கீகரிக்கக் கூடிய விதத்தில் பட்டவர்த்தனமாகவும், சுருக் வார்த்தைகளோடும் இருக்கிறது மதுக்கூராரின் எழுத்து (யாருக்கும் வெட்கம் இல்லை). இந்த ஊசி எழுத்து எனக்கு மிகவும் பிடிக்கிறது.

Read the rest of this entry »

Tags:

விவாதங்களை உற்பத்தி செய்ய முடியாது என்று பலமுறை மாணவர்கள் எனக்கு உணர்த்தி இருக்கிறார்கள்.

விவாதங்கள் தோன்ற வேண்டும் தளம் வெதுவெதுப்பாகவும், சூழல் இணக்கமுள்ளதாகவும் இருந்தால் அது தோன்றுகிறது.

தயாரிக்கப்பட்ட விவாதங்களோடு வகுப்புக்குப் போய், நேராகவும் சுற்றி வளைத்தும் விவாதப் பொருளை விளக்கிய பிறகு, பிடிபடாமலும் ஒட்டுதல் இல்லாமலும் மாணவர்கள் விலகி நிற்க, முகம் தொங்கி வறண்ட இருமல்களோடு வகுப்பை விட்டு வெளியேறிய சந்தர்ப்பங்கள் ஒன்றா இரண்டா? ஆசிரியர் அறை வரை பின்னாலேயே வந்து ஒரு மாணவன், ” என்ன சார் வடியா இருக்கீங்க? உடம்புக்கு ஆகலையா? ” என்று கனிவாகக் கேட்டு, துக்கம் அகற்ற, மீண்டும் ஒரு விவாதத்தைத் தயாரிக்க உட்காருவேன்.

Read the rest of this entry »

Tags: ,

1

காந்தி போற்றிய சிந்தனையாளர்களில் ஒருவர் டால்ஸ்டாய். டால்ஸ்டாயில் இருந்து கட்டுரையைத் தொடங்கலாம்.

தரம், ஒழுக்கம் – என்ற இரட்டை முழக்கங்கள் பள்ளி அமைப்புகளின் அஸ்திவாரங்கள். ராணுவக் கட்டுப்பாடு, நிறுவன விதிகள், பாடப்புத்தகச் சுமை, பயம் உண்டாக்கும் தேர்வுகள், பரிசு தண்டனை ரேங்க் வழங்கி மாணவரைத் தரம் பிரித்தல், மாணவர்களின் பன்முகங்களை அழித்துப் பள்ளிக்குப் பொருந்தக் கூடிய ஒற்றை முகத்தைப் பிசைந்து  வடித்தல்… எனப் பள்ளிகள் முழந்தைகள் மீது செலுத்திய அதிகாரங்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் இன்றி சமூகம் முழுச் சம்மதம் தந்து வந்தது. சின்ன முணுமுணுப்பு கூட இல்லை. காலம் காத்திருந்தது.

பள்ளிக் கல்வி குறித்த எதிர்ப்பேச்சுகள் 19ஆம் நூற்றாண்டில் எழுந்தன. பேசியவர்களுள் குறிப்பிடத்தகுந்தவர் டால்ஸ்டாய்.

தரம், ஒழுக்கம் என்ற அதிகாரப் பேச்சுக்கு மாற்றாக, “குழந்தைகளின் சுதந்திரம், குழந்தைகளின் கற்பனைத் திறன்” என்ற இசைக்குரல் டால்ஸ்டாயிடம் இருந்து கேட்டது. ‘மாணவர்களுக்குக் கற்பித்தல்’ (Instruction) என்ற சர்வமொழியை மறுத்து, ‘மாணவர்களோடு உரையாடல்’ (dialogue) என்ற சுமூக மொழியை முதல்முதலாக அறிமுகப்படுத்தினார் டால்ஸ்டாய். அவர், கல்வியின் அடித்தளம் அனுபவம் என்றார். கற்பதறகான வழி சுதந்திரம் என்றார். அந்தக் காலத்தில் இந்த வார்த்தைகள் பரிகாசத்துக்குரியவை ஆயின.

Read the rest of this entry »

Tags: ,

1

வகுப்பறையின் கவனத்தைப் பெறுவதற்காக கோமாளி ஆகிப் போனவள் அந்தச் சிறுமி.

பேசுவதற்காக அவள் எழும் போதெல்லாம் வகுப்பில் சிரிப்பலைதான்.

“யாருக்குத் தெரியும்?’ என்று ஆசிரியர் கேள்வி எழுப்பியதும் உடனே கையைத் தூக்கி விடுகிறாள். அவள் கையைத் தூக்கியதுமே சிரிப்பு பொங்க ஆரம்பித்து விடுகிறது.

தமிழ் ஆசிரியர் ‘உஷ்ஷ்’ என்று சிரிப்புச் சத்தத்தை அடக்குகிறார். கொஞ்சம் கனிவானவர். “சொல்லும்மா துர்கா! சிலப்பதிகாரக் கதையின் தலைவி யார்? நேத்துப் படிச்சோம்பல!” பிரியமாய்த் தூண்டுகிறார். துர்கா பதில் சொல்கிறாள் “சாத்தப்பன்!”. இது தன்னை அவமதித்த பதில் என்று ஆசிரியர் கருதுகிறார். “சீ! உக்காரு கழுதை!” கனிவு இப்போது நாறுகிறது. கண்ணகி என்பது அவள் ஞாபகத்தில் இருக்கிறது. பதில் அளிக்கும்போது ஒரு சம்பந்தமும் இல்லாத ‘சாத்தப்பன்’ வருகிறான். இந்தச் சிறுமியைப் பரிகாசத்தில் தள்ள எழவு பிடிச்சவன் எங்கிருந்து வந்தான்? இவளுக்குள் என்ன குழப்பம்? கண்டுபிடிக்க யாருக்குப் பொறுமை இருக்கிறது?…

Read the rest of this entry »

Tags: