பள்ளிகளுக்கு வெளியே குழந்தைகளை அழைத்துச் செல்லும் ஆசிரியர்களுக்குப் பெரும் பிரச்சனை அவர்களை எவ்வித சேதாரமும் இல்லாமல் சேட்டைகள்  செய்யவிடாமல் கூட்டத்தில் தொலைந்து போய்விடாமல் பத்திரமாகப் பாதுகாத்துத் திரும்பக் கொண்டுவந்து விடுவதுதான். நாம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களிலானாலும் சரி, புகழ்பெற்ற அருங்காட்சியகங்களினாலும் சரி கூட்டமாக கல்விச் சுற்றுலா வரும் குழந்தைகளை (சீருடையுடனே அவர்கள் அழைத்து வரப்படுவார்கள். அப்போதானே தொலைந்து போனாலும் எளிதாகக் கண்டுபிடிக்க முடியும்) அவர்களுடைய மேய்ப்பர்களான ரெண்டு அல்லது மூணு ஆசிரியர்களுடன் பார்க்கலாம். மிருகக் காட்சி சாலைகளில் மிருகங்களின் மீது கற்களைக் குழந்தைகள் எறிவதை ஆசிரியர் பெரும்பாலும் கண்டிப்பதில்லை.

Read the rest of this entry »

Tags: , , ,

கலை உலகம் பற்றியும் ஊடகம் பற்றியும் புதிய ஆசிரியனில் வரும் விமர்சனங்களைக் கவனிக்கிறேன். விமர்சனங்களில் நிதானம் இருக்கிறது. உணர்ச்சிவசப்பட்டு நிலைகுலையாத – உற்சாகம் கொண்டு சரிந்து விழாத நிதானம்! நவம்பர் இதழில் மதுக்கூர் இராமலிங்கமும் சோழ.நாகராஜனும் ஊடகங்கள் பற்றி எழுதியிருந்தார்கள். வாசகன் உணர்வுப் பூர்வமாய் புரிந்து அங்கீகரிக்கக் கூடிய விதத்தில் பட்டவர்த்தனமாகவும், சுருக் வார்த்தைகளோடும் இருக்கிறது மதுக்கூராரின் எழுத்து (யாருக்கும் வெட்கம் இல்லை). இந்த ஊசி எழுத்து எனக்கு மிகவும் பிடிக்கிறது.

Read the rest of this entry »

Tags:

விவாதங்களை உற்பத்தி செய்ய முடியாது என்று பலமுறை மாணவர்கள் எனக்கு உணர்த்தி இருக்கிறார்கள்.

விவாதங்கள் தோன்ற வேண்டும் தளம் வெதுவெதுப்பாகவும், சூழல் இணக்கமுள்ளதாகவும் இருந்தால் அது தோன்றுகிறது.

தயாரிக்கப்பட்ட விவாதங்களோடு வகுப்புக்குப் போய், நேராகவும் சுற்றி வளைத்தும் விவாதப் பொருளை விளக்கிய பிறகு, பிடிபடாமலும் ஒட்டுதல் இல்லாமலும் மாணவர்கள் விலகி நிற்க, முகம் தொங்கி வறண்ட இருமல்களோடு வகுப்பை விட்டு வெளியேறிய சந்தர்ப்பங்கள் ஒன்றா இரண்டா? ஆசிரியர் அறை வரை பின்னாலேயே வந்து ஒரு மாணவன், ” என்ன சார் வடியா இருக்கீங்க? உடம்புக்கு ஆகலையா? ” என்று கனிவாகக் கேட்டு, துக்கம் அகற்ற, மீண்டும் ஒரு விவாதத்தைத் தயாரிக்க உட்காருவேன்.

Read the rest of this entry »

Tags: ,

1

காந்தி போற்றிய சிந்தனையாளர்களில் ஒருவர் டால்ஸ்டாய். டால்ஸ்டாயில் இருந்து கட்டுரையைத் தொடங்கலாம்.

தரம், ஒழுக்கம் – என்ற இரட்டை முழக்கங்கள் பள்ளி அமைப்புகளின் அஸ்திவாரங்கள். ராணுவக் கட்டுப்பாடு, நிறுவன விதிகள், பாடப்புத்தகச் சுமை, பயம் உண்டாக்கும் தேர்வுகள், பரிசு தண்டனை ரேங்க் வழங்கி மாணவரைத் தரம் பிரித்தல், மாணவர்களின் பன்முகங்களை அழித்துப் பள்ளிக்குப் பொருந்தக் கூடிய ஒற்றை முகத்தைப் பிசைந்து  வடித்தல்… எனப் பள்ளிகள் முழந்தைகள் மீது செலுத்திய அதிகாரங்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் இன்றி சமூகம் முழுச் சம்மதம் தந்து வந்தது. சின்ன முணுமுணுப்பு கூட இல்லை. காலம் காத்திருந்தது.

பள்ளிக் கல்வி குறித்த எதிர்ப்பேச்சுகள் 19ஆம் நூற்றாண்டில் எழுந்தன. பேசியவர்களுள் குறிப்பிடத்தகுந்தவர் டால்ஸ்டாய்.

தரம், ஒழுக்கம் என்ற அதிகாரப் பேச்சுக்கு மாற்றாக, “குழந்தைகளின் சுதந்திரம், குழந்தைகளின் கற்பனைத் திறன்” என்ற இசைக்குரல் டால்ஸ்டாயிடம் இருந்து கேட்டது. ‘மாணவர்களுக்குக் கற்பித்தல்’ (Instruction) என்ற சர்வமொழியை மறுத்து, ‘மாணவர்களோடு உரையாடல்’ (dialogue) என்ற சுமூக மொழியை முதல்முதலாக அறிமுகப்படுத்தினார் டால்ஸ்டாய். அவர், கல்வியின் அடித்தளம் அனுபவம் என்றார். கற்பதறகான வழி சுதந்திரம் என்றார். அந்தக் காலத்தில் இந்த வார்த்தைகள் பரிகாசத்துக்குரியவை ஆயின.

Read the rest of this entry »

Tags: ,

1

வகுப்பறையின் கவனத்தைப் பெறுவதற்காக கோமாளி ஆகிப் போனவள் அந்தச் சிறுமி.

பேசுவதற்காக அவள் எழும் போதெல்லாம் வகுப்பில் சிரிப்பலைதான்.

“யாருக்குத் தெரியும்?’ என்று ஆசிரியர் கேள்வி எழுப்பியதும் உடனே கையைத் தூக்கி விடுகிறாள். அவள் கையைத் தூக்கியதுமே சிரிப்பு பொங்க ஆரம்பித்து விடுகிறது.

தமிழ் ஆசிரியர் ‘உஷ்ஷ்’ என்று சிரிப்புச் சத்தத்தை அடக்குகிறார். கொஞ்சம் கனிவானவர். “சொல்லும்மா துர்கா! சிலப்பதிகாரக் கதையின் தலைவி யார்? நேத்துப் படிச்சோம்பல!” பிரியமாய்த் தூண்டுகிறார். துர்கா பதில் சொல்கிறாள் “சாத்தப்பன்!”. இது தன்னை அவமதித்த பதில் என்று ஆசிரியர் கருதுகிறார். “சீ! உக்காரு கழுதை!” கனிவு இப்போது நாறுகிறது. கண்ணகி என்பது அவள் ஞாபகத்தில் இருக்கிறது. பதில் அளிக்கும்போது ஒரு சம்பந்தமும் இல்லாத ‘சாத்தப்பன்’ வருகிறான். இந்தச் சிறுமியைப் பரிகாசத்தில் தள்ள எழவு பிடிச்சவன் எங்கிருந்து வந்தான்? இவளுக்குள் என்ன குழப்பம்? கண்டுபிடிக்க யாருக்குப் பொறுமை இருக்கிறது?…

Read the rest of this entry »

Tags: